motivational tamil book
எல்லா சூழ்நிலையிலும் பாசிட்டிவ்வாக இருப்பது என்பது அசாதாரணமான காரியம். ஆனால், அதை மிகச் சாதாரணமாக தன்வசப்படுத்தி அடுத்தவர்களையும் அதே பாதையில் பயணிக்கச் செய்யும் மிகப் பெரிய சேவையை செய்து கொண்டிருப்பவர்தான் ‘பாசிடிவ்’ பெருமாள் அவர்கள்.
 
நாம் நம்மால் முடியாது என்கிற விஷயத்தை இவர் ஏன் முடியாது? என்று நம்மிடம் கேட்பது மட்டுமல்லாமல் எப்படி முடியும் என்பதற்கான விடையையும் கண்டு பிடித்து வைத்திருப்பார்.
 
ஒவ்வொருவரும் கடந்து செல்கிற பல பிரச்சனைகளை, இவர் அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சொல்லிக் கொண்டே செல்வார். பிரச்சனைகளைக் கடப்பது மட்டுமல்ல வாழ்க்கை, அவற்றை தீர்ப்பதற்கான வழியையும் சொல்பவர்தான் உண்மையான வழிகாட்டி. அவ்வகையில் இவர் நமக்குக் கிடைத்த ‘உண்மை வழிகாட்டி’.
 
‘உலகில் பணக்காரன் ஆவது மட்டுமல்ல வாழ்க்கை, அவரவர் வாழ்வில் சந்திக்கின்ற அனைத்தையும் எதிர்கொள்வதுதான் வாழ்க்கை’ என்னும் இவரது மகாதத்துவம் ஒவ்வொரு மனிதனையும் மகத்தான வாழ்க்கையை வாழச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் சில விஷயங்களை வழி நடத்திச் செல்ல மிகச்சிறந்த சிந்தனையாளர்களின் வழி காட்டுதல் தேவைப்படுகிறது. அன்பு நண்பர் ‘பாசிடிவ்’ பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் இன்று பெரும் பணக்காரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் ஆனவர்கள் பலர்.அவர்களில் இன்றும் பணக்காரர்களாகவே இருப்பவர்களும் பலர்.
 
“பணம் மனம் ஞானம்” எனும் இந்நூலில் வரும் சம்பவங்களை நாம் நம் வாழ்வில் இதுவரை சந்தித்திருப்போம்; ஆனால் அவற்றை உணர்ந்திருக்கமாட்டோம். அப்படிப்பட்ட விஷயங்களை எடுத்துக்காட்டி விளக்கங்களோடும், செயல்முறையோடும் நமக்கு வழங்கி இருக்கிறார். உங்கள் வெற்றி உங்கள் கையில்தான் என்பதை எடுத்துரைக்கும் அற்புத நூல். ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கைப் பக்கம் ஒவ்வொன்றையும் உயர்ந்த நிலையை அடைய வைக்கும் அற்புதப் பாடங்கள் நிறைந்த நூல்.
 
பல்வேறு டிஜிட்டல் தளத்தில் இன்றைய உலகம் பரந்துவிட்ட நிலையில், அனைத்து வழியிலும் உங்கள் வாழ்க்கை முறையையும், தொழில் முறையையும் மிகச் சரியான வழியில் அழைத்துச் செல்லும் இந்தப் ‘பணம் மனம் ஞானம்’ வழங்கும் பாடங்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இதை வாங்கிப் பாதுகாப்பதைவிட முக்கியம் அதைப் படித்துப் பயன்பெறுவது. வாங்கிப் படியுங்கள். இன்னும் இத்தளத்தில் பல்வேறு நூலை அன்பு நண்பர் ‘பாசிடிவ்’ பெருமாள் வெளியிட வேண்டும் என்ற பிரார்த்தனையோடு வாழ்த்தி காத்திருக்கிறேன் உங்களோடு…
 
கவிஞர் க.மணிஎழிலன்
இயக்குநர், மேம் கிரியேஷன்ஸ்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *