tamil motivational business book by positive perumal

அனைவருக்கும் உற்சாகமான வணக்கம்!

நான் சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன் “பணம் மனம் ஞானம்” என்னை மிகவும் கவர்ந்தது, நண்பர், இந்நூலின் ஆசிரியர் உயர்திரு. ‘பாசிடிவ்’ பெருமாள் அவர்கள் இந்த புத்தகத்தை எனக்கு ஒரு நிகழ்வில் வழங்கி இருந்தார்கள். நான் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் பல காரணங்களால் அப்படியே ஒரு சில நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தன. இருந்தாலும் நேரம் ஒதுக்கி படித்து விட வேண்டும், அவர் கொடுத்த புத்தகத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை, அந்த அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக, சிறப்பாக, சீரும் சிறப்புமாக புத்தகத்தை எழுதியிருந்தார்கள்.

ஒரு 100 புத்தகங்கள், சுய முன்னேற்ற நூல்கள் படித்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதை ஒரு தேனி எப்படி தேனை ஒவ்வொரு பூக்களில் இருந்தும் சேகரிக்குமோ, அதே போல பல்வேறு நல்ல தகவல்களை தான் கடந்து வந்த பாதை மற்றும் பயணங்களில் இருந்தும், கற்றுக்கொண்ட ஆசான்களிடமிருந்தும், தன் அனுபவத்தை முடிந்தவரை ஒளிவுமறைவில்லாமல் எழுதி இருக்கிறார். என்னுடைய வாழ்வும் பல இடங்களில் அவரோடு ஒத்துப்போவது ஆச்சரியமாக இருந்தது, குறிப்பாக கிராமத்து வாழ்க்கை, மார்கெட்டிங் துறை இப்படி பல… அனைவரும் வாசிக்க வேண்டிய உன்னத நூல்!

வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, பல அறிய விஷயங்களின் தொகுப்பாக மிகச்சிறப்பாக படைத்திருக்கிறார். குறிப்பாக தொழில் முனைவோர் ஆக விருப்பம் உள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்து உழைப்பவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று.

இந்த நூலில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷங்கள் நிறைய உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 101 ரகசியங்கள்! ஏழை, செல்வந்தர் மனோபாவத்தை இதைவிட யாரும் சிறப்பாக தோலுரித்து காண்பிக்க முடியாது. மிக அருமை!

அருமை நண்பர் பாசிட்டிவ் பெருமாளுக்கு கிடைத்த வாழ்க்கை துணைவி போல எல்லோருக்கும் அமைந்து விட்டால் நிச்சயம் வெற்றிதான். அருமை சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த அறிய புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கும் பொழுது எனக்கு தோன்றிய எண்ணம் என்னவென்றால், என்ன ஒரு அற்பணிப்போடு இந்த நூலை எழுதி இருக்கிறார். Really Great, Positive Perumal Bro!!

நம்பிக்கையை, வளத்தை, வெற்றியை, லட்சியத்தை, மனதின் ஆற்றலை, வெற்றி மனோபாவத்தை, இப்படி ஒரு முழுமையான நூலாக, நெசவாளி ஒரு துணியை நெய்வது போல மிகத்தரமாக அருமை நண்பர் திரு. பாசிட்டிவ் பெருமாள் இந்த புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்த புத்தகம் உலகம் முழுவதும் வெற்றிபெற துடிக்கும், வெற்றிக்காக போராடும், வெற்றிப் பயணத்தில் இருக்கும் அனைவரது கைகளிலும் தவழ வேண்டிய நூல்!

அன்பு சகோதரரின் அனைத்து முயற்சிகளும் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

பேரன்புடன்,
உதயசான்றோன்
உலக சாதனை படைத்த சர்வதேசப் பயிற்றுனர்,
சிறந்த நூலுக்கு தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *